Saturday 1 August 2015

தீமை செய்யாதீர்கள் - உங்களுக்கு சனி நன்மை செய்வார்

சனி பகவானை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பிடியில் சிக்கி தவிக்காதவர்களும் இருக்க முடியாது. பொதுவாக ஒருவருக்கு எந்த துன்பம் வந்தாலும் சரி, அவர்கள் முதலில் வசைபாடுவது சனியைத்தான். சிவன், விஷ்ணு, முருகர், விநாயகர், அம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஒப்பாக சனி பகவானையும் பக்தர்கள் தரிசனம் செய்தும் அவர் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் துன்பங்களை தருவது தவிர்க்க முடியாதது. அதற்கு காரணமும் இருக்கிறது. மேலும் மனிதர்கள் மட்டு மின்றி தெய்வங்களையும் பிடித்த சனி, ஒரு கட்டத்தில் சனி பகவானுக்கு அந்த ஆற்றலை அளித்த சிவபெருமானையே பிடித்தார். சனி ஒரு தீவிர சிவ பக்தர். நேர்மையானவர், திறன் மிக்கவர், அழுத்தமானவர் அதே நேரம் ஆற்றல் வாய்ந்தவர்.

No comments:

Post a Comment