Thursday 9 July 2015

படித்தது 4 டிகிரி! பார்ப்பதோ குப்பை அள்ளும் வேலை!



மும்பை: மும்பையில் கிட்டதட்ட 4 பட்டப் படிப்புகளைப் படித்துவிட்டு குப்பை அள்ளும் வேலை பார்த்து வருகின்றார் பட்டதாரி ஒருவர். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்போர் சிலர், படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்வோர் சிலர் என இருந்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது. மும்பையில் வசிக்கும் சுனில் யாதவ் என்பவர் நான்கு பட்டப்படிப்புகளை முடித்து விட்டு ப்ருஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் அதாவது மும்பை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் ஏழையாகவே பிறந்தோம் அடிமைகளாகவே வளர்ந்தோம், படிப்பறிவு இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற டாக்டர். அம்பேத்கரின் கூற்றை மக்கள் நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா தலித் மக்களும் குப்பை அள்ளுவது இல்லை. ஆனால் குப்பை அள்ளுபவர்கள் அனைவரும் தலித் மக்கள் தான் இந்த நாட்டில்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment