Wednesday 29 July 2015

சனி பகவான் மந்திரம்

சனீஸ்வரர் மந்திரங்கள்!
சனிபகவான் மந்திரங்களும் அந்த மந்திரங்களால் ஏற்படும் நன்மைகள்
சனீஸ்வர காயத்ரி மந்திரம்
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ஸ்லோகம்

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

இந்த மந்திரங்களால் ஏற்படும் பயன்கள்
மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தியாகும்,
விவசாயத்தில் மேன்மை,
எருமை விருத்தி,
இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்படும்,
உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்படும்.
வேலைக்காரர்களால் நன்மை பெறலாம்.
எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்கும்.
சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்கும்
சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.


சனி ஸ்தோத்திரம்

ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:

சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும். சனி பகவான் மந்திரம் சனிகவான் மந்திரம் சனீஸ்வர மந்திரம்

2 comments: